கல்வியே கேள்வியா?
மாதம் ஒன்று
முழுமையானது
பள்ளிகள் திறந்து,
போதனை செய்யத்தான்
புத்தகங்கள் இல்லை!
ஏடெடுத்து
எங்கள் பிள்ளைகள்
பள்ளிக்குச் செல்ல
இயலவுமில்லை!
மாற்று வழியொன்று
வழங்கவும் இல்லாமல்,
மன்றத்தின் தீர்ப்பை
ஏற்கவும் இல்லாமல்,
மாணவ மணிகளை
மத்தியில் விடுவது
மக்களாட்சியில்
முறையும் இல்லை!
Comments